‎நோய்‬ ‪‎பல‬ ‪‎தீர்க்கும்‬ ‪‎திரிபலா‬ !!!

‎நோய்‬ ‪‎பல‬ ‪‎தீர்க்கும்‬ ‪‎திரிபலா‬ !!!
----------------------------------
திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத
மருந்து. இது ஒரு நித்ய ரசாயனமாகவும்,
காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று
பழங்கள் சேர்ந்த கூட்டுப்பொருள்தான்
திரிபலா. அந்த மூன்று மூலிகைகள்:
கடுக்காய் (Terminalia chebula), தான்றிக்காய்
(Terminalia belerica), நெல்லிக்காய் (Emblica
officinalis).
திரிபலாவின் உதவி
திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத
மருத்துவத் தயாரிப்பு. உலகம் முழுவதும்
ஆயுர்வேத மருத்துவர்களால், பெரும்பாலான
நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படு
வது திரிபலா.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய
மூன்றின் கலவை அற்புதமான காயகல்பமாகி,
தேவர்களின் அமிர்தத்தைப்போல் எந்த ஒரு
நோயையும் தீர்க்கும் அற்புதச் சக்தியைப்
பெற்றுள்ளது.
திரிபலா சூரணத்தைத் தினமும் சாப்பிட்டுவர,
வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரணக்
கோளாறு நீங்கும், ரத்தம் சுத்திகரிக்கப்படும்,
ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரலில்
புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா,
மஞ்சள் காமாலை இருப்பவர்களுக்கு ஏற்றது.
தோலில் அரிப்பு, கருமை, சிவப்புப் புள்ளிகள்
இருந்தால், இந்தச் சூரணத்தைத் தடவிவந்தால்
விரைவில் சரியாகும். தொடர்ந்து, திரிபலா
சாப்பிட்டு வருபவர்களுக்கு, தோல்
மினுமினுப்பு அடையும். உடல் வலுவாகும்,
நோய்கள் அண்டாது.
காலில் வெடிப்பு இருந்தால், இரவு
படுக்கைக்குப் போகும் முன்பு, சுடுநீரில்
திரிபலா சூரணத்தைக் கலந்து,
வெதுவெதுப்பான சூட்டில் பாதத்தை 20
நிமிடங்கள் ஊறவைத்து எடுக்கலாம்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் ஒரு டம்ளர்
தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி திரிபலா
சூரணத்தைக் கலந்து, காலை நேரத்தில்
சாப்பிடச் சில மணி நேரத்தில் மலச்சிக்கல்
பிரச்சினை சரியாகும்.
‪#‎கடுக்காய்‬
-------------
கடுக்காயை ஹரீதகி என்று அழைப்பார்கள்.
இதற்கு விஜயா, அமிர்தா, காயஸ்தா,
ஹேமவதி, பத்யா, சிவா என்றெல்லாம்
பெயர்கள் உண்டு. பிராணனை அளிக்க
வல்லதால், இதனைப் பிராணதா என்றும்
அழைப்பார்கள்.
அறுசுவையில் உப்பைத் தவிர்த்துத் துவர்ப்பு,
இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய
ஐந்து சுவைகள் நிறைந்த கடுக்காயில் வாத-
கப தன்மையைச் சீர்படுத்தும் சக்தி
இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு
போல் பாவிக்கப்படுவதால், அதை
நீக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.
கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது
நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும்.
கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென சித்த
மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை
அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம்,
ரோகிணி, திருவிருதுதம். மேலும் மரங்கள்,
இடம், காயின் வடிவம், தன்மை ஆகியவற்றைப்
பொறுத்துக் கருங்கடுக்காய், செங்கடுக்காய்,
வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனப் பல
வகைகள் உள்ளன.
இன்றைக்கு தமிழ் மருத்துவம் மட்டும் அல்ல தமிழ் மருத்துவத்திலுள்ள பெரும்பாலானவற்ற
ை திருடியுள்ள ஆயுர் வேத மருத்துவத்திலும்..இன்ன பிற மருத்துவங்களிலும் ஒரு பயன்படுத்தப்படும் அசைக்க முடியாத ஒரு பொருளை பற்றி கூற போகிறேன்்
உயரமான மர இனத்தை சேர்ந்தது கடுக்காய் மரம்..மரங்கள் அடர்ந்த பெரிய காடுகளில் மட்டும் தான் இவற்றை காண முடியும்
கடுக்காய் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமான மரம் எனில் மிகையாகாது..
வட இந்தியாவில் இருக்கும் கடுக்காய் மரங்கள் குறைந்த உயரத்தை கொண்டன..ஆயின் விந்திய மலைக்கு தெற்கே இம்மரங்கள் உயரமானவையாகவும் செழித்தும் காணப்படுகின்றன..வங்காள தேசத்தில் வளரும் மரங்கள் நடுத்தரமானவை..
இலங்கையில் உள்ள கடுக்காய் மரங்களை நான் அங்கு பலாங்கொட எனும் பகுதிக்கு எனது மாணவர்களை காண சென்ற போது கண்டிருக்கிறேன் .அவையும் நடுத்தரமானவையே..
கடுக்காயில் ஏழு வகை உண்டு
அவை
1 அபயன்
2 விசயன்
3பிரிதிவி
4சிவந்தி
5அமுர்தம்
6 அரோகினி
7திருவிருத்தி
அபயன் கடுக்காய்
இந்த வகைக் கடுக்கை உருண்டு,திரண்டு சுமார் ஐந்து சென்டி மீட்டர் நீளமுள்ளதாக இருக்கும். இது சற்று கரு நிறமாகத் தோன்றும்.இதன் குணம் என்னவெனில் தேகத்தில் ஏற்படும் வழிகளை போக்கும். நெஞ்சில் கட்டியிருக்கும் கோழையை உடைத்து வெளியேற்றும்.கண் நோயை குணப்படுத்தும்.மலச்சிக்கலைப் போக்கி,மலத்தை இறக்கி வெளியேற்றும்.
விசயன் கடுக்காய்
வட இந்தியாவில் உள்ள அடர்ந்த காடுகளில் வளரும் மரங்களில் கிடைக்க கூடிய இவை சாதரனமானவைகளை விட சற்று பருமனாகவே இருக்கும்.வாத நோயைக் குணப்படுத்தும் சக்தி இவற்றிற்கு உண்டு.அனைத்து வகை விஷங்களையும் முறிக்க வல்லது.
பிரிதிவி
விந்திய மலைக்குக் கீழ்பகுதியில் வேகிதூரம் பரவி உள்ள பெருங்காடுகளில் பிரிதிவிக்கடுக்
காய் மரங்கள் ஏராளமாய் வளர்ந்துள்ளன.இவ்வகை கடுக்கையின் மேல் தோல் மெல்லியதாக சதையுடன் ஒட்டி இருக்கும்.இதன் நிறம் இலேசான மஞ்சள் நிரதுடநிருக்கும்.பித்த சம்பந்தமுடைய எவ்வகை கோளாறுகளையும் போக்கி விடும்.உடலில் நோய் தோன்றாமல் பார்த்துக்கொள்ளும்.
சிவந்திக் கடுக்காய்
தென்னிந்தியப் பகுதிகளில் அடர்ந்த காடுகளில் இவ்வகை கடுக்காய்கள் ஏராளமாய் வளர்ந்துள்ளன.இவற்றின் மேல் தோல் பொன் நிறமாய் இருக்கும்.ஆனால் தோல் சதையுடன் ஒட்டி இருக்கும்.இவற்றிற்கு மூல நோயை குணப்படுத்தும் சக்தி உண்டு..
உடலில் உற்பத்தியான வாய்வினால் ஏற்படும் அதனைக் கோளாறுகளையும் அடியோடு போக்க வல்லது.
அமிர்தக் கடுக்காய்
அடர்ந்த காடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வளர்ந்திருக்கும் பயங்கரமான ஒரு வகை மரம் இது.இம்மரத்தில் கிடைக்கும் காய்க்கு அமிர்தக்கடுக்காய் என்று பெயர்.
ஆனால் இது விஷம்..
கபவாதங்களைத் தணிப்பதில் சிறந்தது, மூல
நோய்க்குச் சிறந்தது. பசியைத் தூண்டுவது,
அக்னியை அதிகரிக்கச் செய்வது. புண்களை
ஆற்றுவது, மலபந்தத்தை அகற்றுவது.
நாட்படப் பயன் படுத்தினால் சற்று ஆண்மை
குறைவை ஏற்படுத்தலாம். இதில் செய்கிற
முக்கியமான மருந்துகள் தசமூல ஹரீதகி,
அகஸ்திய ரசாயனம் போன்றவையாகும்.
உடலில் வீக்கம், பாண்டு, குல்மம் போன்ற
நோய்களுக்கு இது சிறந்தது.
வலிமையூட்டி, நீர்ப்பெருக்கி, உள்ளழலகற்றி
போன்ற குணங்களைக் கொண்டுள்ளது.
புண்கள், கண்நோய், இருமல், காமாலை,
கைகால் நமைச்சல், தலைநோய், இரைப்பு,
தொண்டை வலி, நாவறட்சி, மார்பு நோய்,
மூலம், மேகம், வயிற்றுப் பொருமல், விக்கல்
போன்றவற்றைக் குணப்படுத்தும். கடுக்காய்
பொடியுடன் எள் சேர்த்துச் சாப்பிட,
குஷ்டங்கள், விரணங்கள் மாறும். கொழுப்பை
நீக்கும் தன்மை உடையது.
ஜீரணச் சக்தி அதிகரிப்பு, அறிவு சக்தி
மேம்பாடு, ஐம்புலன்களுக்கும் சக்தி தருதல்
ஆகிய குணங்கள் இதற்கு உண்டு. கனமான
தொடைப்பகுதியை சுருக்குதல், தோல்
வியாதியைக் குணப்படுத்துதல், மண்ணீரல்
சக்தியை மேம்படுத்துதல், உடல்
வீக்கங்களைப் போக்குதல், சுவாச நோய்களைக்
கட்டுப்படுத்துதல், ரத்த நாள அடைப்பை நீக்கி
இதயத்தை வலுப்படுத்துதல் போன்ற பல
பலன்களைக் கடுக்காய் தருகிறது.
மூன்று கடுக்காய்த் தோலை எடுத்து,
தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்
பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து
எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து
உப்பு சேர்த்துத் துவையலாக அரைத்துச்
சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவர, ஜீரண
சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம்
பெறும்.
கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே
அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்துக்
கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன்
வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர வாதவலி,
பித்த நோய்கள் குணமாகும்.
15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து
நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர்
நீர் விட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பின்
அதிகாலையில் குடித்தால், நாலைந்து முறை
பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப்
பிணிகள் மாறிவிடும்.
மூக்கிலிருந்து ரத்தம் வந்தால், சிறிதளவு
கடுக்காய்த் தூளை எடுத்து மூக்கால் உறிய,
ரத்தம் வருவது நின்றுவிடும்.10 கிராம் வீதம்
கடுக்காய்த் தூள், காசுக்கட்டித் தூள் சேர்த்த
சிறிதளவு பொடியை, வெண்ணெயில்
குழைத்து, நாக்குப் புண், உதட்டுப் புண்ணில்
பூசிவரப் புண்கள் ஆறும்.
நாவறட்சி, தலை நோய், ஈரல் நோய், வயிற்று
வலி, குஷ்டம், இளைப்பு, தொண்டை நோய்,
புண், கண்நோய், வாதம், வயிற்றுப் புண்,
காமாலை போன்ற நோய்களைக் குணப்
படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு.
‪#‎தான்றிக்காய்‬
--------------
தான்றிக்காயை, Terminalia bellarica என்று
குறிப்பிடுவோம். இதைக் கர்ஷம், அக்ஷம்
என்று குறிப்பிடுவார்கள். இது
மஹாவிருக்ஷம் ஆகும். எல்லா இருமலுக்கும்,
சளிக்கும் இதை முகதாரணம் செய்வதற்குச்
சிறந்தது. கபப் பித்தத்தை இது தணிக்கும்.
சிறிது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை
மாற்றும், கண்ணுக்குச் சிறந்தது. இதிலிருந்து
எடுக்கும் எண்ணெய்க் கூந்தல் வளர்வதற்கு
உதவுகிறது. கண்ட ரோகங்களை மாற்றுவது,
தொண்டை கரகரப்புக்குச் சிறந்தது.
வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிட வாதத்தைத்
தணிக்கும்.
தான்றி மரம் பிரம்மாண்டமான தோற்றம்
கொண்டது. 120 அடி வரைகூட வளரும்.
தண்டின் அடிப் பகுதியின் சுற்றளவு 10
அடிவரை இருக்கக்கூடும். இதன் இலைகள்
கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படும்.
குறிப்பாகக் கறவை மாடுகளின் பால்
பெருக்கத்துக்கு, இது சிறந்த தீவனம்.
வட மொழியில் தான்றியை ‘விபீதகி’
என்பார்கள். தினந்தோறும் தான்றி உண்டால்,
நோய் நீங்கும் என்பது இதன் அர்த்தம். இதைக்
கொட்டை நீக்கிக் கருகாமல் வறுத்துப்
பொடித்து 1 கிராம் அளவு சர்க்கரை கலந்து
காலை, மாலை கொடுக்க மலச்சிக்கல், குடல்
பலமின்மை, காய்ச்சல், பித்தத் தலைவலி,
ரத்தமூலம், சீதபேதி ஆகியவை தீரும்.
தான்றிப் பொடி 3 கிராமுடன் சமஅளவு
சர்க்கரை வெந்நீரில் கலந்து காலை, மாலை
சாப்பிடப் பித்த நோய்கள், வாய் நீர் ஒழுகல்
தீர்ந்து தெளிவுறும். இதன் காயை நீர்விட்டு
இழைத்துப் புண்களில் பூச ஆறும். அக்கியில்
பூச எரிச்சல் தணிந்து குணமாகும்.
தான்றிக்காயின் தோலை வறுத்துப்
பொடித்துத் தேனுடனோ சர்க்கரையுடனோ
காலை மற்றும் மாலை சாப்பிட ரத்த மூலம்
நிற்கும். தான்றிக்காய் தோலைச் சேகரித்துச்
சூரணம் செய்துகொள்ளவும். இதில் அரை
தேக்கரண்டி அளவு தேனில் கலந்து தினசரிச்
சாப்பிட்டு வர அம்மை நோய்கள் தீரும்.
தான்றிக்காயைச் சுட்டு மேல்தோலைப்
பொடித்து, அதன் எடைக்குச் சமமாய்ச்
சர்க்கரை கலந்து தினசரிக் காலையில்
வெந்நீருடன் சாப்பிட்டுவரப் பல்வலி, ஈறு
நோய்கள் போன்றவை குணமாகும்.
தான்றிக்காய் தோல், திப்பிலி, அதிமதுரம்
ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துத்
தூள் செய்துகொள்ளவும். இதில் 10 கிராம்
அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில்
கொதிக்க வைத்து, நான்கில் ஒரு பாகமாய்ச்
சுண்ட வைத்த கஷாயத்தை வடிகட்டி காலை,
மாலை இரண்டு வேளையும் 100 மி.லி.
அளவில் குடித்துவர ஆஸ்துமா,
மூச்சிளைப்பு, மூச்சுத்திணறல், படபடப்பு
ஆகியவை எளிதில் குணமாகும்.
தான்றிக்காய், நெல்லிக்காய் வகைக்கு 100
கிராம், கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி,
குப்பைமேனி வகைக்கு 50 கிராம், சுக்கு,
மிளகு, திப்பிலி, சீரகம் வகைக்கு 25 கிராம்,
அன்னபேதி செந்தூரம் 10 கிராம்- இவை
அனைத்தையும் ஒன்றாய்க் கலந்து தூள்
செய்து ஒரு தேக்கரண்டி பொடியைத் தேனில்
குழைத்துக் காலை, மாலை சாப்பிட்டுவர
ரத்தம் பெருகும், ரத்தச் சோகை விலகும்.
‪#‎நெல்லிக்காய்‬
--------------
நெல்லிக்காயை ஆயுர்வேதம் வயஸ்தா என்று
அழைக்கிறது. வயஸ்தா என்று சொன்னால்
மூப்படையாமல் காக்கச் செய்வது என்று
அர்த்தம். இதற்குச் சிவா என்றும், பலம்
என்றும் பெயருண்டு. தாத்ரீ பலம் என்றும்
அழைப்பார்கள். அமிர்தத்துக்குச் சமமானதால்
அமிர்தா என்ற பெயரும் உண்டு. ரக்த நோய்கள்,
பித்த நோய்கள் போன்றவற்றைக் குறைக்கும்.
கல்ப மருந்து, ரசாயன மருந்து, பித்தத்தைத்
தணிப்பது. ஐந்து ரசங்களை உடையது,
உப்புச்சுவை இல்லாதது.
நெல்லிக்காயை மஞ்சள் பொடியுடன் சேர்த்துச்
சாப்பிடப் பிரமேகம் கட்டுப்படும். ஸரம் எனும்
மலத்தை இளக்கும் குணம், இதற்கு உண்டு.
சியவனபிராச ரசாயனம் இதன் மூலம்
செய்யப்படுகிறது. முடி வளர்க்கும்
எண்ணெய்களில் இது சேர்க்கப்படுகிறது.
எனவே, இதற்குக் கேஷ்யம் எனும் குணம்
உண்டு. ரத்தப் பித்தம் எனும் ரத்தக் கசிவு
நோய்களுக்கு, இது பயன்படுத்தப்படுகிறது.
முக்குற்றத்தையும் இது மாற்றும். தாத்ரி
அரிஷ்டம் குழந்தைகளுக்குக்
கொடுக்கப்படுகிறது. ஒரு வேளை உணவு
உட்கொள்ளும்போது தொடக்கத்திலும்,
நடுவிலும் இறுதியிலும் ஒருவன் இதை
உட்கொண்டுவந்தால், நோயின்றி வாழ்வான்
என்று ராஜவல்லப நிகண்டு சொல்கிறது.
நெல்லிக்காய்ப் பொடியை நெல்லிக்காய்ச் சாறு
கொண்டு பாவனை செய்து சர்க்கரையும்,
தேனும், நெய்யும் சேர்த்து லேகியம்போல்
சாப்பிட்டுவர, சிரஞ்சீவியாக வாழ முடியும்
என்று கூறப்பட்டுள்ளது.
நெல்லி (Phyllanthus emblica)
யுபோர்பியேசி
குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது
இந்திய மருத்துவ முறைகளில் அதிகம்
பயன்படுத்தப்படுகிறது. நெல்லியில்
கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு
இனங்களும் உண்டு.
மற்ற எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு,
அதிக அளவு வைட்டமின் 'சி' நெல்லிக்காயில்
உள்ளது. ஒரு நெல்லியில், தோடம்பழம்
எனப்படும் புளிப்புப் பழங்கள் முப்பதில் உள்ள
அளவுக்கு இணையாக வைட்டமின் சி`
உள்ளதாகக் கருதப்படுகிறது.
இதில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும்
இதர ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
அன்றாடம் ஒன்று சாப்பிட்டுவந்தால், நீண்ட
நாள் ஆரோக்கியமாக வாழலாம். மேலும் மலை
நெல்லிக்காயில் பாலிஃபீனால்கள்,
கனிமச்சத்துகளான இரும்புச்சத்து,
துத்தநாகம், வைட்டமின்களான கரோட்டின்கள்
மற்றும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்
போன்றவை அதிக அளவில் உள்ளன.
கருநெல்லி, அருநெல்லி என்ற இரண்டு
இனங்கள் உண்டு. அருநெல்லியில் அத்தனை
மருத்துவக் குணம் இல்லை. மிகச் சிறியதாக
இருக்கும். கருநெல்லி, எனும் தோப்பு நெல்லி
எனும் காய்தான் சத்து நிறைந்தது,
உருண்டையாக இருக்கும்.
ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம்
வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில்
இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள்
அதிகமாக இருக்கிறார்கள்.
வைட்டமின் சி
அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால்,
காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை
ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும். வேக
வைத்தால் நெல்லிக்காயின் வைட்டமின் சி
குறையாது, அதிகரிக்கும்.
தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றைச்
சாப்பிடும் போது வெறும் நெல்லிக்காயைத்
தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன்மூலம்
அதில் இருக்கும் துவர்ப்பு தெரியாது.
நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப்
பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக்
காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின்
சத்துகள் முழுமையாகக் கிடைக்கும். ஒரு
நாளைக்கு இரண்டு அல்லது மூன்று
நெல்லிக்காய் சாப்பிடலாம்.
நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய
இருப்பதால், எலும்புகள் உறுதிப்படும்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை
அதிகரிக்கும். ரத்தச் சோகைக்கும் நெல்லிக்காய்
நல்ல மருந்து.
நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக,
செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான்
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய்
வகைகளிலும் தலை சாயத் தயாரிப்பிலும்
பயன்படுத்தப்படுகிறது.
தினமும் 4 நெல்லிக்காய்ப் சாற்றுடன் அரை
டீஸ்பூன் மஞ்சள்பொடி சேர்த்து
உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.
அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள்
காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்
சாற்றுடன், இஞ்சிச் சாறு அருந்திவந்தால்
தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற
தோற்றத்தைப் பெறலாம்.
தினமும் 4 நெல்லிக்காய்ப் சாற்றுடன் அரை
டீஸ்பூன் மஞ்சள்பொடி சேர்த்து
உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.
அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள்
காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்
சாற்றுடன், இஞ்சிச் சாறு அருந்திவந்தால்
தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற
தோற்றத்தைப் பெறலாம்.
நெல்லிக்காயைத் துவையல் செய்தும்
சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன
வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து
நெல்லிக்காய் உடன் துவையல் செய்து
சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு
சீராகும். கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன்
நெல்லிக்காய் சேர்த்துச் செய்யும் மருந்து
மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும்
வல்லமை கொண்டது.