பப்பாளி பழம் சருமத்தைக் குணப்படுத்தும்

சருமத்தைக் குணப்படுத்தும் ஆற்றல்கொண்ட பழம் பப்பாளி.

சருமம் பொலிவாக, இளமையாக இருக்க
வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு,
பப்பாளி அருமருந்து.
* சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, இயற்கை அழகை அளிக்கிறது பப்பாளி.
* பப்பாளியுடன் சிறிது தேன் கலந்து
தடவினால், சருமம் ஈரப்பதத்துடன் பொலிவாக இருக்கும்.
* பப்பாளியைக் கைகளால் நசுக்கி, முகத்தில்cதடவி ஐந்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால்,cமுகம் பொலிவு பெறும்; முகப்பருக்கள் மறையும்.
* சருமத்தில் தொடர்ந்து தடவியும் உட்கொண்டும் வந்தால், சருமம் மென்மையாகும்.
* சருமம் முதுமை அடைவதைத்
தாமதப்படுத்துகிறது.
கரும்புள்ளிகளை நீக்குகிறது.
* பப்பாளியை மசித்து, தலையில் பூசி்,
குளித்துவந்தால் முடி உறுதியடையும்;
நன்கு வளரும்.
* பாத வெடிப்புகளைப் போக்கவும் பப்பாளியை மசித்துப் பூசலாம்.
குறிப்பு:
பப்பாளியில் உள்ள ஆல்பா ஹைட்ராக்சி
அமிலம்தான் (Alpha hydroxy acid) ஆன்டிஏஜிங்cபொருளாகச் செயல்படுகிறது.
ஆனால், இந்த அமிலம்தான் பப்பாளியின்cஅமிலத்தன்மைக்கும் காரணமாக இருக்கிறது.
எனவே, நீண்ட நேரம் இதை முகத்தில் பூசக் கூடாது.
5 முதல் 10 நிமிடங்களுக்குள் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட வேண்டும்.