வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்:

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து
சூத்திரங்கள்:

* உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள்
எல்லாவற்றையும் குறித்து வைத்துக்
கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல, தப்பித்தவறி
கூட அதே தவறை இன்னொருவருக்கு
செய்துவிடக்கூடாது.

*யாரையும் இளக்காரமாக பார்க்காதீர்கள்.
அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய
விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும்.
* நமக்கு பிடிக்காதவாரகவே இருந்தாலும்
அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து
சொல்லிவிட்டு செல்லுங்கள்.

* மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு
மதிப்புக் கொடுங்கள்.

* 'என்ன வாழ்க்கைடா இது' என்று நினைப்பதை
விட, 'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை'
என்று எண்ணி வாழுங்கள்.

* மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற
எண்ணத்தை ஒழித்துக்கட்டுங்கள். அது தாழ்வு
மனப்பான்மையை உருவாக்கிவிடும்.

* நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால்
சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழ
பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான
அன்பு என்பது அதுதான்.

* சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை
சிறப்பாகச் செய்து முடியுங்கள். பெரிய
வாய்ப்புகள் தேடி வரும்.

* பிறரை தவிர்க்கும் முன் ஒரு நிமிடம்
சிந்தியுங்கள். உங்களை பிறர் தவிர்த்தால்
தாங்கிக் கொள்ள முடியுமா என்று.

* எதிரே வருபவரின் தகுதியை பாராமல் சிறு
புன்னகை உதித்தபடி கடந்து செல்லுங்கள்..

* உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகிச்
செல்கிறார் என்றால் அமைதியாக
ஒதுங்கிவிடுங்கள்....