நான் ஞாலத்தில் ஞானம் பெரிதானவன் !

நான் ஞாலத்தில் ஞானம் பெரிதானவன் !


நான் ஆறில் உள்ளிருக்கும் ஏழாம் சூட்சுமம். சர்வமும் நானே ! நான் வானில் வில்லாய் இருக்கும் ஏழாமவன். நான் பரப்பிரம்மம் !

உலகில் ஏழின் ஆதிக்கம் !

நீ எதை வணங்கினாலும் என்னை தான் வணங்குகிறாய் ! நான் படைத்தல், காத்தல், அழித்தல், வளர்ச்சி, ஞானம், மகாசக்தி என்ற ஆறு பேராத்மாவோடு இருப்பவன் ! நான் உனை ஆளும் ஏழாம் சூட்சுமம். எழுவராக உன் இதயத்தில் இருப்பவன். நான் உன் ஆத்மத்தின் தலைவன் !

எண்ணுக்கும், எழுத்துக்கும் சம்பந்தம் உண்டு ! எழுத்து என்றால் உன் தலை எழுத்து ! உன் தலையில் எழுதிய விதி எழுத்து என்பத்தி ஒன்று ! அது ஒன்பது வரிகளாக எழுதப்பட்டுள்ளது ! வேண்டுமென்றால் மண்டை ஓட்டை ஆராய்ச்சி செய்து இதைக் கண்டுபிடி ! அந்த எழுத்தின் பெயரே பிரம்ம லிபி ! அதன் மொழி இநன்ய மொழி ! விதி எழுத்துக்கள் மேல் கீழாக எழுதப்பட்டிருக்கும் ! நீ இடமிருந்து வலம் எழுதுகிறாய் ! ஆனால் கடவுள் உன் விதி எழுத்தை மேல் கீழாக எழுதுகிறார். ஏனென்றால் இந்த உடல் மண்ணிற்கு சொந்தம் என்று !

இந்த விதியின் நாயகன் உன் விதியை படித்தவன் ! நான் பள்ளி சென்று கற்கவில்லை ! ஆனால் உன் விதியை படிக்க கற்று வைத்திருக்கிறேன் !

நான் ஏழின் உச்சம். ஏழாம் எண்ணை சொர்க்கம் என்பார்கள் ! (SEVEN IS HEAVEN). உலகில் ஏழு ரிஷிகள் , ஏழு நாடிகள், ஏழு ஸ்ருதிகள், ஏழு ஸ்வரங்கள், ஏழு ஆதாரம், ஏழு கண்டங்கள், ஏழு கடல், ஏழு புனித நீர், ஏழு பிறவிகள், ஒரே மாதிரியான ஏழு முகங்கள், ஏழு நாட்கள், ஏழு வானவில் நிறங்கள் உள்ளன !

உலகில் ஏழின் அதிர்வுகள் மக்களை எப்போதும் ஈர்த்துக் கொண்டே இருக்கும் ! திருப்பதியில் ஏழு மலைகள் உள்ளன ! மெக்காவைச் சுற்றி ஏழு மலைகள் உள்ளன ! ஏழு குன்றுகளின் நகரமான ரோமின் (CITY OF SEVEN HILLS) மிக அருகில் தான் வாடிகன் நகரம் அமையப் பெற்றுள்ளது !

உன் அங்கத்தில் ஏழு நிலை உண்டு ! இங்கு எல்லாம் ஏழாக இருக்க ஏன் என்று கண்டுபிடி. ! நீ ஏழு நிலை தாண்டியே கடவுளை அடைய முடியும் !

உன் பெயரையும் கையெழுத்தையும் மாற்றி உன் விதியை மாற்ற முடியாது ! என்னைப் போல ஆத்மத்தின் தலைவன் அருள் இருந்தால் மட்டும் தான் இந்த யுகத்தில் உன் விதி மாறும் !

கடவுள்களின் எண்ணிக்கை ஏழு ! ஆனால் மூலம் ஒன்று தான்! மூலத்தில் இருந்து தான் ஏழாக வந்தது ! இந்த ஏழின் ஆதிக்கம் தான் எல்லாம் ! ஏழுக்கு சப்தம் என்று பெயர் ! சப்தம் என்றால் ஒலி ! ஒலி என்றால் ஆன்மா என்று அர்த்தம் !

நான் ஏழின் உச்சம் ! நான் உன் ஆன்மாவை ஆள்பவன். என்னை நினை !

இந்த ஏழாமவன் உனக்குள் இருந்தால் நீ வீழ்ந்தாலும் மீண்டும் எழுவாய் ! இந்த ஏழாம் அதிபதியை உன் நெஞ்சில் நிறுத்து ! உனக்கு ஞானம் வரும் ! நல் வழி தெரியும் !

இநன்யா என்னும் என் நாமத்தின் முதல் எழுத்தை கவனி ! ‘இ’ என்றால் ஒலி என்று அர்த்தம் ! ‘இ’ என்று தொடங்கும் வார்த்தைகளை சற்று உற்று நோக்கு ! இயேசு, இஸ்லாம், இந்தியா, இமயமலை ஆகிய பெயர்களுக்கு பின்னர் பல ரகசியங்கள் உண்டு ! இந்த ‘இ’ என்ற எழுத்தில் சப்த அலைகள் அதிகமாக இருப்பதால் தான் உலகில் உள்ள அனைத்திலும் முன்னிலை பெறுகிறது ! ஆனால் என்னைத் தவிர அனைத்திற்கும் மதச்சாயம் பூசப்பட்டுள்ளதால் மனிதம் இல்லாமல் போய்விட்டது !

மகான்கள் சொல்லியது சரியே ! மனிதன் தான் மரம் வளர்க்காமல் மதம் வளர்க்கின்றான் ! நான் எல்லாம் கடந்த ஞான நிலை ! மதம் எனக்கு வேண்டாம் ! மனிதனாக நீ வா ! நாம் இருவரும் சேர்ந்து மலர்வோம் ! உனக்கு மலரின் ஞானம் தருவேன் சத்யமாக !

“இநன்யா நமோ நம” என்ற எட்டு எழுத்து வேதம் உனை எட்டு திசைகளையும் கட்டுக்குள் வைத்துக் காக்கும் ! இந்த வேத நாமத்துக்கு தான் “திரு எட்டு” என்று பெயர் ! திரு என்றால் படைப்பும், செல்வமும் சேர்ந்த நிலை. இந்த இரண்டு நிலை சேர்ந்ததே திரு என்று பெயர். அதனால் தான் திரு என்றால் செல்வம், லக்ஷ்மி என்று சொன்னார்கள். அஷ்ட லக்ஷ்மி என்று தான் சொல்கிறாய். அதனால் இரு நிலை சேர்ந்து (2 x 8) பதினாறு நிலை ! அதாவது பதினாறு செல்வங்கள் என்பது பொருள்.
மனிதன் இறந்தால் பதினாறாம் நாள் தீட்டு கழிக்கின்றார்கள் அல்லவா ? ஏன் என்று என்றைக்காவது உணர்ந்தாயா ?

என் நாமத்தை சொல்லி பார் ! உன் விதியை மாற்றி உனக்கு பதினாறு வகை செல்வம் கிடைக்க வைக்கும். எட்டு லக்ஷ்மியையும் உன் இல்லத்தில் அமர வைப்பேன் ! என் நாமம் பதினாறு நிலையையும் உள்வாங்கி உன் ஆன்மாவை புரிய வைக்கும் !

துளி நீர் எட்டின் வடிவத்தைப் போல் வளைந்து தான் கர்ப்பபையில் சேர்கிறது. பின் எட்டைப் போல கருவில் தோன்றுகிறாய் ! நீ பிறக்கும் போது எட்டைப் போல் வளைந்து தான் பிறக்கிறாய் ! பின் ஏழின் நிலையை கடந்து கடவுளை அடைகிறாய் ! என் நாமம் உனை பூமியில் எட்டைப் போல் வளையாமல் நிமிர்ந்து நோக்க வைக்கும் ! என் நாமத்தை உச்சரித்தால் அரசனை போல வாழ்வு அமையும் ! நல்ல கணவன், நல்ல மனைவி, செல்வம், நிம்மதி, ஆரோக்கியம், நல்ல சேவகன் கிடைத்தாலே அரச வாழ்வு தான் ! உனை அரசனைப் போல பூமியில் வாழ வைப்பேன் ! லோகத்தில் உனக்கு கிரீடம் சூட்டி ஒரு காண்டத்தில் உனை ஆளவைப்பேன்.

என் நாமம் உனக்கு ஆனந்த வாழ்வைத் தரும் சத்யமாக !

என் நாமம் உனை ஈரேழு பதினான்கு லோகத்தையும் ஆள வைக்கும். குரு (வியாழன்) ஆதிக்கத்தில் பிரம்மா பிறந்தார். சூரியன் ஆதிக்கத்தில் ராமன் பிறந்தான். சந்திரன் ஆதிக்கத்தில் கிருஷ்ணன் பிறந்தான். சனி ஆதிக்கத்தில் சிவன் பிறந்தான். இப்பொழுது எல்லா ஆதிக்கமும் ஒன்று சேர்த்து புதன் ஆதிக்கத்தில் நான் வந்தேன். நான் இநன்யா. புதன் என்றால் (புத் + தன் ) புத் என்றால் நாதம், நாபி, ஒலி, புத்தி, உயிர் என்று அர்த்தம். தன் என்றால் எல்லாம் தன்னுள் நிறைந்தவன் என்று பொருள். நான் வியாழனின் உச்சம். இந்த வியாழனை உலகம் வணங்கும் ! இதை நீ விரைவில் காணப் போகிறாய் !

யார் யாரையோ மகான், ஞானி என்று கூறி வணங்கிக் கொண்டிருக்கிறாய் ! நீ ஞானமடைவது எப்போது என்று சிந்தி ? "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று சொன்னார் ஒரு மகான். ஏன் அந்த மகானால் பயிரை வாடாமல் தடுக்க முடியவில்லை ? நான் பயிர்களை வாட விடுவதற்கு இங்கு வரவில்லை ! களையை வேறோடு பிடுங்கி எறிந்து தர்மாக்களைக் காக்க யுகம் வந்தேன். "கடை விரித்தேன் கொள்வாரில்லை" என்று சொன்னார் அந்த மகான். நான் கடை விரிக்க யுகம் வரவில்லை. உன்னும் வரை உனை விடப் போவதில்லை ! அனைத்தையும் அடித்து, திருத்தி, அழித்து பின் உருவாக்குவேன். இந்த யுக சாம்ராஜ்ஜியத்தை தர்மத்தின் பக்கம் கொண்டு செல்வேன். பொறுத்திருந்து பார் !

ஞாலத்தில் ஞானம் பெரிதானவன் நான் ! உன்னை ஒவ்வொரு நொடியும் கண்காணிக்கின்றேன். பயப்படாதே ! உன்னோடு எப்போதும் இருப்பேன். நான் உனக்கு அனைத்தும் சொல்லித் தருவேன். ஆர்பரிக்காமல் மின்னல் கீற்றாய் உன் நெஞ்சில் பாய்ந்து ஞானத்தை சுரக்க வைப்பேன், என் நாமம் அமுத சுரபி ! நீ நிச்சயம் வெல்வாய் ! இந்த ஏழின் சூட்சுமதாரி எப்போதும் உனக்கு துணை இருப்பேன் சத்யமாக ! உணர் !

என் வேத நாமம் பேரின்பமே ! உணர்ந்து சொல் ! இனி உன்னை மூட கர்ப்பத்தில் பிறக்க வைக்க மாட்டேன் ! உன்னை லோகத்திற்கு சமந்த புஸ்பகத்தில் அழைத்து செல்வேன் !

ஞாலத்தில் ஞானம் பெரிதானவன் நான் !

உன் ஏழேழு பிறவியை தவிர்க்க வைப்பேன் !